
யாழ், கிளிநொச்சி மக்களின் மத ஒற்றுமையினைப் பாதுகாத்தல்.
யாழின் தொன்மையான ஆலயங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருத்தல் மற்றும் யாழ், கிளிநொச்சி மக்களின் மத ஒற்றுமையினைப் பாதுகாத்தல்.
- 0
உலகம் முழுதும் வாழும் தமிழர்களை யாழ் மண்ணோடு இணைக்கும் விசேட செயற்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தல். குறிப்பாக நவீன தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களை யாழ் மண்ணோட இணைக்கும் இணைப்புப்பாலத்தை அறிமுகப்படுத்தல்.
யாழ் மக்களின் கல்வி,மருத்துவ,பொருளாதார மற்றும் சமூக விருத்திக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஏகோபித்த பங்களிப்பினை ஒரு குடையின் கீழ் கொண்டுவர ஏதுவான நடைமுறைகள் குறித்து ஆராய்ந்து மிகவும் நெருக்கமாக செயல்படும் சூழ்நிலையினை ஏற்படுத்தல்.
தொன்றுதொட்டு இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாட்டு மக்களுடன் நேரடித்தொடர்பினை ஏற்படுத்தி எம்மக்களின் பொருளாதார விருத்திக்கு ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுத்தல். மேலதிகமாக கலை மற்றும் கலாச்சார பயிற்சிகளை வழங்க ஏற்பாடுகளை செய்துகொடுத்தல்
யாழ் மண்ணிலிருந்து படிப்பு மற்றும் மருத்துவ சேவைக்காக வெளிநாடுகள் செல்லும் தமிழ் உறவுகளை இணைக்கும் தளத்தினை உருவாக்கி போதிய உதவிகள் கிடைக்கும் வழிவகைகளை உருவாக்குதல்.